"பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்தத்திற்கே வாய்ப்பு" - கமலக்கண்ணன் உறுதி

x

7 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவே வாய்ப்புள்ளதாக, அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவது தொடர்பாக, அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. கூட்டத்திற்கு பிறகு பேசிய அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன், பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென்றே தாங்களும் விரும்புவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்