13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

x

சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த தேன்மொழி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாகவும், அரக்கோணம் ஏஎஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி நகர துணை ஆணையராக இருந்த அன்பு, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாகவும், திருப்பூர் நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வனிதா, தமிழக காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக இருந்த ரோகித் நாதன் ராஜகோபால், கோவை நகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராகவும், நாகை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்பியாக இருந்த அதிவீர பாண்டியன், சென்னை காவல்துறை நிர்வாகப்பிரிவின் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்