ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு

x

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் பர்மீட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிக்கப்படுவதாகவும், பர்மிட் நீட்டிப்பு மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் வரை ஆட்டோக்களை இயக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ. எல்லை வரை அனுமதி வழங்கியதன் மூலம், எல்லை தாண்டியதாக இனி ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்