திருமணம் முடிந்த 2 மாதத்தில்.இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் போராட்டம்

x

ஈரோட்டில் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி பெண்ணின் உறவினர்கள் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீனா, மன்னாதம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் யுவராஜ் வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீனா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது இரு சகோதரிகள் உட்பட உறவினர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்