15 டூவீலர்கள் மாயம்... பட்டப் பகலிலேயே நைசாக தூக்கும் திருடன் - சிக்கிய வீடியோ

x

வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், தொடர்ந்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திருவலம் கூட்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருவலம் குகைநல்லூரை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துச்செல்வம்தான் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவர, அவரிடம் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிலான 15 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்