அதிரடியாக தயாராகும் சட்டசபை - காத்திருக்கும் தமிழகம்

x

2024ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 12ஆம் தேதி உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து, பிப்ரவரி 19ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளார். மேலும், பிப்ரவரி 20ம் தேதி முன்பண மானிய கோரிக்கையினையும், பிப்ரவரி 21ம் தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன... தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்படுகின்றன... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பணிகளை தீவிரப்படுத்தி இன்றைய தினமே முடிக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்