"மதுரையில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் - தமிழிசை உறுதி

x

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என, புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். காரைக்காலில் கட்டப்பட்டுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி வளாகத்தை, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், மதுரை எய்ம்ஸில் மாணவர்கள் படித்து வருவதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காரைக்காலில் 460 கோடி மதிப்பீட்டில், ஜிப்மர் மருத்துவ கட்டிடம் கட்டப்பட உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்