"3 கிலோவாட் வரை விலக்கு - இணையத்தில் விண்ணப்பிக்கலாம்"...தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை

x

மின் இணைப்பு கட்டிடங்களின் மேற்கூரையில், 3 கிலோவாட் வரையிலான சூரிய மின்சக்தி திறன் அமைக்க, சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மேற்கூரை சூரிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்புவோர், இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்