நோயாளிக்கு அறுவை சிகிச்சை.. திடீர் மின்வெட்டு!மருத்துவமனையில் பரபரப்பு | Thiruvallur | Govt Hospital

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தபோது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பொன்னேரி அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர், அறுவைசிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால், அறுவை சிகிச்சை செய்யாமலேயே, அவர் பழைய வார்டுக்கே மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்