கண்சிவந்த உச்சநீதிமன்றம்... ஆளுநர் அஜெண்டாவில் திடீர் மாற்றம்... | RN Ravi

x

மதுரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நாளைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் வகையில், நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துதல், மேலக்காலில் கைவினை கலைஞர் முருகேசனை சந்தித்தல், தனியார் ஓட்டலில் தொழில் முனைவோர் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நாளைய மதுரை நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடிய நிலையில், நாளைய நிகழ்ச்சிகள் ரத்தானதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்