வைரலாகும் சூப்பர் மார்கெட் வீடியோ.. ஆன்மிக சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி - வீடெல்லாம் மிளகாய் தூள்

x

சென்னை, கொரட்டூரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், இளைஞர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இளைஞர் ஒருவர் தினமும் சூப்பர் மார்க்கெட் வருவதையும், நீண்ட நேரம் கடைக்குள் சுற்றிவிட்டு வெளியேறுவதையும், கடை ஊழியர்கள் கவனித்துள்ளனர். இது குறித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் டூத் பேஸ்ட், டீத்தூள் சாக்லேட் போன்றவற்றை திருடி செல்வது தெரிய வந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே வீடு முழுக்க மிளகாய் தூளை தூவிவிட்டு, 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜய் என்பவர் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்ற போது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து, கைரேகை நிபுணர்களை கொண்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்