திடீரென வெடித்த சிலிண்டர் - டீ கடையில் மளமளவென பரவிய தீ - ஆவடியில் பயங்கரம்

x

ஆவடி அருகே டீக்கடையில் திடீரென சிலிண்டர் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி எதிரே உள்ள நேரு பஜாரில் பாபு என்பவரின் டீக்கடையில் திடீரென ஏற்பட்ட சிலிண்டர் கசிவால் கடை பற்றி எரிய தொடங்கியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 2 கைகளிலும் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாபுவை, ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாசர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்