சிதம்பரத்தில் திடீரென பரவிய "கரும்புகை" - மூச்சுத்திணறி தவித்த பொதுமக்கள்

x

சிதம்பரம் நகரையொட்டி சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கிராம மக்கள் குப்பை கிடங்கு அருகே இரவு நேரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம் - காட்டுமன்னார்கோயில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை தீயை அணைக்க விடாமல் தடுத்த பொதுமக்கள், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்