தமிழக அரசுக்கு திடீர் கோரிக்கை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

x

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்... தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட 16 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படாத நிலையில், அவை வீணாகும் சூழல் உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்தார்... 16 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும் எனவும், தமிழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அன்புமணி இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்