திடீரென இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கோடை மழை! குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி.!

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. சத்துவாச்சாரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 6 வது நாளாக மழை பெய்தது. காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்