வட்டாட்சியர் வீட்டில் திடீர் ரெய்டு.. எடுக்க எடுக்க வந்த பணம்.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் தென்னரசு. இவர், 1 லட்ச ரூபாய் லஞ்ச பணம் பெறும் போது, லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ஆத்திப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 45 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்