சென்னையில் திடீரென மாறிய வானிலை... தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 4 விமானங்கள்

x

சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. கோவை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூருவில் இருந்து மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. விமானங்கள் திருப்பிவிடப்பட்ட நிலையில், வானிலை சீரான பின்னர் திரும்பி வர அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, சென்னையில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்