பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள்.. விடாமல் பின்தொடர்ந்த மர்ம வேன்.. திடீரென கேட்ட அழுகை..

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளை பின் தொடர்ந்த மர்ம வேனால் பரபரப்பு ஏற்பட்டது...

கழுகுபுலிகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டு மாணவிகள் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை மர்ம வேன் ஒன்று பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயந்து போன மாணவிகள் அழுது சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டனர். இதனையடுத்து, அந்த வேனில் இருந்தவர்கள் திடீரென அங்கிருந்து வேகமாக சென்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....


Next Story

மேலும் செய்திகள்