கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு - சென்னையில் அதிர்ச்சி

x

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்ச் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த அவர், வகுப்பிற்கு செல்லாமல் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதியம் அவருடன் தங்கி இருந்தவர்கள் வந்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.‌ இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பெயரில் கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அதிக அரியர்கள் இருந்ததும், அவருடன் படித்த சக மாணவர்கள் ஐந்தாம் ஆண்டில் படித்து வருவதால் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அவரது நண்பர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்