பெண்ணின் உணவு குழாயில் சிக்கிய ஊக்கு...அறுவை சிகிச்சையின்றி ஊக்கு அகற்றம்

x

தர்மபுரியை சேர்ந்த கலா என்ற பெண் வாயில் ஊக்கை வைத்திருந்த போது, தவறுதலாக தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது. இதையடுத்து, அருகே உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்ற போது, அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என்று கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் எந்த அறுவை சிகிச்சையும் இன்றி எண்டோஸ்கோபி மூலமாக ஊக்கை அகற்றினர். சுமார் ஒரு மணி நேரம் போராடி உணவுக்குழாயில் திறந்த நிலையில் சிக்கியிருந்த ஊக்கை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து, அந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்