தனியாக சிக்கிய குதிரைக் குட்டி - கடித்துக் கொன்ற தெருநாய்கள்... அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி

x

உதகையில் தனியாக சிக்கிய குதிரைக் குட்டியை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் பசுமாடுகள், குதிரைகள், வளர்ப்பு எருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கமர்சியல் சாலையில் சுற்றித் திரிந்த குதிரைக் குட்டியை அங்கு உலாவிக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வளைத்துக் கடித்து குதறின. இதில், பரிதாபமாக குதிரை குட்டி உயிரிழந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்