வெள்ளத்தில் சிக்கிய ரயில்.. ஸ்டேஷனில் மயங்கி விழுந்த சிறுவன்- பரபரப்பு காட்சி

x

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் புறப்படுவதற்காக காத்திருந்தபோது, சிறுவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில், மழை வெள்ளத்தால் நின்ற ரயிலில் இருந்த பயணிகள் 40 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், கோவில்பட்டி அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறுவன் ஒருவன் ரயிலில் மயங்கி விழுந்தார். அப்போது சிறுவனை அங்கிருந்த சிறப்பு மருத்துவமனை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்