ஸ்ரீரங்கத்தில் திடீரென நடந்த சம்பவம் - அச்சத்தில் உறைந்த மக்கள்

x

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பள்ளத்திற்கு அடியே இருக்கும் பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது... இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படும் நிலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்