தமிழக மீனவர்கள் விவகாரம்.. இலங்கை அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி

x

தமிழக மீனவர்கள் விவகாரம்.. இலங்கை அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேசினார். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு காண இந்திய அரசிடமும், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். சிறையில் உள்ள தமிழக மீனவர்களிடம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை எடுத்துரைத்ததாகவும், மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம் என்றும் தெரிவித்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புவதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்