"ஆன்மிகம்.. வள்ளலார்.. சனாதனம்" - ஆளுநர் பரபரப்பு பேச்சு

x

வள்ளலார் சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர், பாரத் என்பது குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பாரத் என்பது ஆன்மிகவாதிகள் மற்றும் ரிஷிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒன்று என வள்ளலார் கூறுவதுதான் சனாதன தர்மத்தின் மூலம்... இதனை புரிந்துகொள்ளாமல் சிலர் பேசி வருவதாகவும் தெரிவித்தார். சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் என கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை என்றும் ஆளுநர் கூறினார். தான் ஒரு சனாதனவாதியாக இருப்பதால், எவர் தன்னை அசிங்கப்படுத்தினாலும் ஒதுக்க முடியாது... அதைத்தான் சனாதானம் கூறுகிறது என ஆளுநர் விளக்கமளித்தார். அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் ஆன்மிகத்தோடு வளர வேண்டும்... சனாதனம் வலியுறுத்தும் ஒரே குடும்பமாக வளர வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்