வேகமாக வரும் வாகனங்களே குறி.. கண்ணுக்கே தெரியாத கொடூரம்.. - நடுரோட்டில் கீழே தள்ளி திருட்டு

x

திருத்தணி அடுத்த தாழவேடு வனப்பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சாலைகளில் இரு பக்கங்களிலும் கயிறை கட்டி, இருசக்கர வாகனத்தில் வருபவர்களை கீழே விழ வைத்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இரவில், திருத்தணியில் இருந்து சிவாடா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை கயிறை கட்டி இழுத்து கீழே தள்ளி மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் முதியவர் மயங்கிய நிலையில், அவரிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். பின்னர் மயக்கம் தெளிந்த முதியவர், அருகில் நெமிலி கிராமத்தில் உள்ள இளைஞர்களை அழைத்துக் கொண்டு வருவதற்குள், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்