தசராவுக்கு சிறப்பு ரயில்..பயணிகளுக்கு ஷாக் கொடுத்த முன்பதிவு | Chennai | Tamilnadu

x

தசரா விழாவையொட்டி சென்னை-நெல்லை இடையே நேற்று முன்தினம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு முடிந்தன.

அதாவது, இன்று இரவு 10-40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நாளை சனிக்கிழமை காலை 9-45 மணிக்கு நெல்லை வந்து சேரும் என அறிவிவிப்பு வெளியான உடனே அனைத்து இருக்கைகளும் முன்பதிவு முடிந்தன.

இதேபோல நெல்லையில் இருந்து 24-ம் தேதி மாலை சென்னைக்கு புறப்படும் சிறப்பு ரெயிலின் முன்பதிவும் நிறைவு பெற்றன.

நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரயில்களில் ஏற்கனவே டிக்கெட்கள் விட்டுத் தீர்ந்த நிலையில் சிறப்பு ரயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்