சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்ட "குருவி" - சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள் - வீடு வரை பறந்த ரெய்டு

x

சென்னை மண்ணடியில் குருவியாக செயல்பட்டு வந்த நபரின் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது...

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை விமானம் மூலம் வந்திறங்கிய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டார்... அவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்... சோதனையில் அவர் கணக்கில் காட்டப்படாத 6 கிலோ தங்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது... அந்த நபர் புதுக்கோட்டையைச் சேர்ந்த அஸ்ரத் என்பது தெரிய வந்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டு, சென்னை மண்ணடி மரைக்காயர் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுசோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது... மேலும் அஸ்ரத்திடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்