ஊட்டி அணையில் மூழ்கி சாப்ட்வேர் இன்ஜினியர்... திருமணத்திற்கு சென்ற போது சோகம்

x

ஊட்டி அணையில் மூழ்கி சாப்ட்வேர் இன்ஜினியர்... திருமணத்திற்கு சென்ற போது சோகம் உதகை அருகே அணையில் மூழ்கி மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டையை சேர்ந்தவர் ராம்குமார். மென்பொருள் பொறியாளரான இவர், நண்பரின் திருமணத்திற்காக நீலகிரி மாவட்டம் அத்திக்கல்லுக்கு வழியில், பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் அணையில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிகிறது. தீயணைப்பு துறையினர் ராம்குமாரின் உடலை மீட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்