சிறாவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி.. காளை முட்டி 11 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

x

சிறாவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொங்கலையொட்டி சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டியை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 271 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்டனர். இந்த சூழலில், சிறாவயல் பொட்டலில் ஆங்காங்கே கட்டுமாடு அவிழ்க்கப்பட்டதால், கூட்டத்தில் தாறுமாறாக சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடு முட்டி வலையம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் உட்பட அடையாளம் தெரியாத 35வயது மதிக்கத்தக்க நபர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்