சிவகங்கையில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நிகழ்வு.. குவிக்கப்பட்ட 1500 போலீஸ்

சிவகங்கையில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நிகழ்வு.. குவிக்கப்பட்ட 1500 போலீஸ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது... 2006ம் ஆண்டுக்கு பின்னர், கும்பாபிஷேகம், மற்றும் புதிய தேர் செய்வது போன்ற காரணங்களால் தேரோட்டம் நடக்காமல் இருந்தது. அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால் வெள்ளோட்டம் நடைபெறாத நிலையில் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று காலை 6 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது... தேரை இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான ஊழியர்கள் வடம்பிடித்து இழுத்தனர்... பொதுமக்கள் தடுப்பு வேலிகளுக்கு வெளியே நின்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது... ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்