"எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்" -மாமன்ற கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம்
மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்ற திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் ஆன்லைன் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், திருமணம் மற்றும் மங்கள நிகழ்சிகளுக்கு சமுதாய நலக்கூடத்தை வாடகைக்கு முன்பதிவு செய்வதற்கான இணையதள விண்ணப்பமும் தயார் செய்யப்பட்டு, மாமன்றக் கூட்ட தீர்மானத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிவத்தில், விண்ணப்பதாரர் பெயர், விவரங்கள் , நிகழ்ச்சி விவரம் உள்ளிட்டவை உடன் முன்பதிவு செய்வதற்கான நிபந்தனைகளும் சட்ட திட்டங்களும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
Next Story