நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்-பரபரப்பின் உச்சியில் சிவகங்கை

x

காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த திருக்குமார், கழனி வாசல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் காரில் வந்தவர்கள் மோதுவதுபோல் நெருங்கிச் சென்றனர். சற்று தூரம் சென்ற பிறகு, காரில் வந்தவர்கள் ஒரு உணவகத்துக்கு சாப்பிடச் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற திருக்குமார், அவர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காரில் வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பைரவனும், ராஜேஷும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, உணவகத்திற்கு வெளியே அழைத்து வந்து, தரையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருக்குமார் உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் உணவகத்தை சுற்றி வளைத்து, கற்களால் காரைத் தாக்கி உள்ளனர். இதனால் பயந்த பைரவனும், ராஜேஷும், தங்களிடம் இருந்த துப்பாக்கியை அருகில் உள்ள முள்புதர் பகுதியில் வீசி எறிந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரை பிடித்து, அவர்கள் வீசி எறிந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்