கருக்கா வினோத் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்... போலீசார் விளக்கத்திற்கு முரணாக FIR

x

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், சென்னை காவல்துறை கொடுத்த விளக்கத்திற்கு முரணாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை காவல்துறை சம்பவம் நடந்த அன்று விளக்கம் ஒன்றை அளித்தது. அதில் பெட்ரோல் குண்டு வீச கருக்கா வினோத் முற்பட்டபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு பாட்டில்கள் சாலையில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் காவல்துறை தெரிவித்த விளக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக கருக்கா வினோத் ஆளுநர் மாளிகையை நோக்கி இரண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீவைத்து வீசியதாகவும், இரண்டாவது பாட்டில் பூந்தோட்டம் அமைந்துள்ள தடுப்பு சுவர் மீது விழுந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கருக்காவினோத்தை பிடிக்க வந்த பாதுகாப்பு பணி போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசி விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்