கோவையில் அதிர்ச்சி சம்பவம்-கணவரின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்தவுடன் மனைவிக்கு கிடைத்த பகீர் தகவல்

x

கோவை அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நபரின் உடலை மாற்றி எடுத்துச் சென்று தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர், உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மணிக்கு பதிலாக அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரின் உடலை உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து உடல் மாற்றிக் கொடுக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, ஊழியர்கள் செல்போனில் தொடர்புகொண்டபோது, உறவினர்கள் யாரும் செல்போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில், உடலை வாங்கிச் சென்றவர்கள் இறுதிச் சடங்கை நடத்தியது போலீசாரின் விசாரணயைில் தெரியவந்தது. உயிரிழந்த இருவரும் ஒரே உடலமைப்புடன் இருந்ததால் அடையாளம் காணமுடியாத நிலையில் தவறு நடந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பையும் அழைத்து போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் இது விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்