கரண்ட் பில் கேட்டு ஷாக் ஆன நபர் - "வட்டிக்கு வாங்கி கட்டுறதா?" - குமுறும் சென்னைவாசி

x

சென்னை ஓட்டேரியில் உள்ள துணைமின் நிலையத்தில், மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர். ஓட்டேரியில் வாடகை வீட்டில் வசித்துவரும் கணேஷ் பெருமாள் என்பவர், இதுவரை ஆயிரத்து 700 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் செலுத்தியதாகவும், தற்போது பத்து மடங்காக அதிகரித்து 17 ஆயிரம் ரூபாயாக மின்கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மின் மீட்டரை ஆய்வு செய்யுமாறு அழைத்தால், அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்