நடுக்கடலில் படகை இடித்து தள்ளிய கப்பல்.. மூழ்கி மூச்சுக்கு போராடிய 12 மீனவர்கள் - திக் திக் நொடி

x

கப்பல் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டு மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்பட்ட 12 குமரி மீனவர்கள் தாயகம் வந்தடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஏழு பேர் உள்பட 12 மீனவர்கள் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் ஆழ்கடலில் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்ற இழுவை கப்பல் மோதியதில் விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. 12 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய இழுவை கப்பல் அவர்களை மீட்டு மாலத்தீவு கொண்டு சேர்த்தது. மாலத்தீவு அதிகாரிகள் 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக வைத்திருந்தனர். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின் சாலை மார்க்கமாக அவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்