சென்னை பஸ்ஸில் தனியாக சென்ற மனைவிக்கு பாலியல் டார்ச்சர்.. நெல்லை பாய்ஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த கணவன்

x

விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 30 வயது மாணவி, கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. ஹோமியோபதி படிப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனது கணவரை பார்த்துவிட்டு, கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு இரவில் பேருந்து சென்றபோது, நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் பேருந்தில் ஏறினர். அவர்களில் இருவர் மதுபோதையில், மாணவியை தகாத முறையில் பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் மாணவியின் உறவினர்கள், விழுப்புரம் அருகே நிற்காமல் சென்ற பேருந்தை வழிமறித்து உள்ளே சென்று, 2 இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் விழுப்புரம் புறக்காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகமது யாசர், தங்க மாரியப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

நாகை மாவட்டம் வெள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 30 வயது மாணவி, கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. ஹோமியோபதி படிப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனது கணவரை பார்த்துவிட்டு, கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு இரவில் பேருந்து சென்றபோது, நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் பேருந்தில் ஏறினர். அவர்களில் இருவர் மதுபோதையில், மாணவியை தகாத முறையில் பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் மாணவியின் உறவினர்கள், விழுப்புரம் அருகே நிற்காமல் சென்ற பேருந்தை வழிமறித்து உள்ளே சென்று, 2 இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் விழுப்புரம் புறக்காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகமது யாசர், தங்க மாரியப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்