கள்ளக்காதலி மகளுக்கு செக்ஸ் டார்சர்..பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் -சென்னை அருகே பயங்கரம்...

x

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் சூர்யா. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு, அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து தன் 13 வயது மகளுடன் தனியே வசித்து வந்த அப்பெண்ணுடன், சூர்யா செங்கல்பட்டு அருகே வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதில், இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில், அப்பெண் மீது சூர்யா பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அப்பெண்ணின் 13 வயது மகளிடம் சூர்யா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்