"1மணி நேர மழைக்கே தாங்கல"போட்ட 5 நாள்களிலே அடிச்சிட்டு போன கழிவுநீர்

x

"1மணி நேர மழைக்கே தாங்கல"

போட்ட 5 நாள்களிலே அடிச்சிட்டு போன கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கட்டி முடித்து 5 நாள்களே ஆன கழிவுநீர் கால்வாய் சுவர்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆம்பூர் நகராட்சியில் உள்ள 14-ஆவது வார்டையும், 20-வார்டையும் இணைக்கும் வகையில் 87 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலைகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திடீரென்று ஒரு மணி நேரம் பெய்த மழையால், கழிவு நீர் கால்வாய் பக்கவாட்டு சுவர் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்