பெருங்களத்தூரில் மழைநீருடன் கலந்த கழிவு நீர்..நோய் தொற்று பரவும் அபாயம்

x

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை ஆகிய இடங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் வளர்ந்து வருவதால், நோய்த்தொற்று பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்