உள்ளே தூங்கி கொண்டிருந்த ஊழியர்கள்... வெளியே பூட்டை உடைத்த கொள்ளையர்கள் - பெரிய ட்விஸ்ட்

x

கடலூர் அருகே, பேக்கரி கடை ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், சொந்தமாக பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்த மர்மநபர்கள், ஊழியர்கள் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் போதே, கல்லா பெட்டியில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மடிக்கணினியை திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்