செந்தில்பாலாஜி எடுத்து வைத்த முக்கிய பாய்ண்ட் - என்ன சொல்ல போகிறார் நீதிபதி அல்லி?

x

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது வரை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்