செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கை... இன்று என்ன நடக்கும்?

x

அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உயர்நீதிமன்றம், புதன்கிழமை விசாரிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்