பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்... அரசு மீது எழுந்த கேள்வி

x

பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேலை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணைவேந்தர் ஜெகநாதனை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். அரசு இரண்டு முறை ஆதாரங்களுடன் உத்தரவு கடிதம் அனுப்பியும், முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர்கள், பதிவாளாரை காப்பாற்ற துடிக்கும் துணை வேந்தர் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்