தாய்லாந்தில் இருந்து வந்த ரகசிய கால்...குறியீடு மூலம் கண்டுபிடித்த அதிகாரிகள் - சென்னை ஏர்போர்ட்டில் பகீர்

x

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ போனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர், சூட்கேஸில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. இதனடிப்படையில், சென்னையில் சோதனையை பலப்படுத்திய அதிகாரிகள், ஷாக்பீசால் வெள்ளை நிறத்தில் அடையாள குறியிடப்பட்ட சூட்கேஸை கைப்பற்றிய நிலையில், அதில் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சூட்கேஸ் புதுச்சேரியை சேர்ந்த பயணியுடையது எனத் தெரியவர, வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அப்பயணியை வலைவீசி தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்