சீல் வைத்தும் அடங்காத ஹோட்டல் - பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு நேர்ந்த கதி

x

உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது...செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் - கோவளம் சாலையில் அமைந்துள்ள பிரியாணி கடையில், சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு மருத்துவமனையில் அனுமதியான அவர்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால், 'புட் பாய்சன்' ஆனதாக தெரிவித்துள்ளனர். இதேபோன்ற புகாரில் தற்காலிக நடவடிக்கைக்கு பின் இந்த கடை மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்