தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு - நெல்லையில் பயங்கரம்

x

நெல்லை மாவட்டம் அம்பை பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்திற்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர், தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அம்பை பேருந்து நிலையத்திற்கு மகேஷ் பேருந்தை ஓட்டி வந்தபோது, அங்கு வந்த மர்மநபர், மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் தலையில் லேசான வெட்டுக் காயத்துடன், மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்