பெருங்களத்தூர் ஸ்டேஷனில் கதறிய தாய்.வண்டலூர் ஸ்டேஷனில் நடந்த அதிசயம்

x

செங்கப்பட்டு செல்வதற்காக கண்டிகையை சேர்ந்த கிரிஜா என்ற பெண், தனது 6 வயது மகன் ஜீவாவுடன் பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்துள்ளார். ஜீவாவை ரயிலில் ஏற்றிவிட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக கிரிஜாவால் ஏற முடியவில்லை. அதற்குள் ரயில் புறப்பட்டு சென்றதால், நடைமேடையிலேயே கதறி அழுவதைக் கண்ட ரயில்வே போலீசார், ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் பிரசாத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வண்டலூர் ரயில் நிலையத்தில், சிறுவனை இறக்கிய காவலர் பிரசாத், கடற்கரை மார்க்கமாக வந்த ரயிலில் அழைத்து வந்து தாயிடம் ஒப்படைத்தார். அப்போது, மகனை கட்டியணைத்துக்கொண்டு, கண்ணீருடன் காவலர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களும் காவலருக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்