பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்... பெற்றோரிடம் ஓடோடி வந்து கதறல்... | School Student | Child Abuse

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர். ஆரணி அடுத்துள்ள கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தன் பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மோகன்ராஜை கைது செய்து போலீசார் சிறையிலடைத்த இந்த சம்பவத்தில், மோகன்ராஜூக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்